Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 27, 2011

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.6 கோடி!

சிதம்பரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் பிரம்மாண்ட முகப்பு தோற்றத்துடன் 2.6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.சுற்றுலா நகரமான சிதம்பரத்தை மையமாகக் கொண்டு 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் பெயரில் அரசு மருத்துவமனை 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது.

மாவட்ட பொது மருத்துவமனைக்கு அடுத்த அந்தஸ்து பெற்றது என்பதால் எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, ஓமியோபதி, சித்தா என தனித்தனி பிரிவுகள் உள்ளன.எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் 500க்கும்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்õக சிதம்பரம் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கட்டட வசதி, படுக்கை வசதி போதாமல் இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு சுனாமி மறுவாழ்வு திட்ட நிதியில் இருந்து மகப்பேறு மற்றும் பெண்களுக்கென மருத்துவமனையின் பின்புறம் 2 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் சுகாதாரதத் துறை மூலம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் 60 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டது.மருத்துவமனை திறந்தபோது கட்டப்பட்ட பழைய கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதையொட்டி உடைந்த கட்டட மேல் தளம், டைல்ஸ் ஆகியன ஆர்.எஸ்.வி., திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.இருந்தும் கட்டடம் மோசமான நிலையிலேயே காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கோடி செலவில் மருத்துவமனை கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் மருத்துவமனையில் பழமையான கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட 2 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதையொட்டி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பிரம்மாண்டமான முகப்பு தோற்றத்துடன் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

அறுவை சிகிச்சை அரங்கம், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எக்ஸ்ரே, ஸ்கேன், அவசர சிகிச்சை உள்ளிட்டவைகள் கீழ் தளத்திலும், முதல் தளத்தில் நோயாளிகள் படுக்கை அறைகளும் கட்டப்பட உள்ளது.விரைவில் பணியை துவக்க பொதுப்பணித் துறையினர் ஆயத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதையொட்டி பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் சிகிச்சை பிரிவுகள் மகப்பேறு மருத்துவமனை கட்டடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...