Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 28, 2010

முதன் முறையாக வெற்றிலைக்கு அரசு மானியம்



தேனி, செப்.27 வெங்காயம், திராட்சை, வெற்றிலை, பாக்கு விளைவிக்க முதன்முறையாக அரசு மானிய உதவி வழங்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில், பல்வேறு பயிர்களை விளைவிக்க மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு முதன் முறையாக வெங்காயம், திராட்சை, வெற்றிலை, பாக்கு விளைவிக்க மானிய உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திராட்சை விவசாயிகளுக்கு மொத்தம் 100 ஹெக்டேர் நிலத்திற்கு மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த 100 ஹெக்டேருக்கான ஒதுக்கீடும் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் படி புதிதாக திராட்சை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். வெங்காயம், வெற்றிலை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய்க்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...