Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 14, 2010

18ஆம் தேதி முதல் இலவச செல்போன் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.


தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, இலவச செல்போனுடன், வாழ்நாள் முழுவதும் பேசும் வகையிலான செ‌ல்போ‌ன் இணைப்பை பி.எஸ்.என்.எல். வழங்க ஏற்பாடு செய்து உள்ளது. அவினாசியில் வரு‌ம் 18ஆ‌ம் தேதி இந்த திட்டம் தொடங்குகிறது.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக செல்போனும், செல்போன் இணைப்பும் வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டு உள்ளது. இலவச செல்போனுடன் மொபைல் இணைப்பு வழங்கும் திட்டத்தை, ராஜஸ்தான் மாநிலம் பாகியில், கடந்த 9ஆ‌ம் தேதி பி.எஸ்.என்.எல். தலைவர் கோபால்தாஸ் தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு, எல்.ஜி. செல்போனும், அதற்கான பிரி பெய்டு இணைப்புக்கான சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும், வெளியில் இருந்து வரக்கூடிய அழைப்புடன் பேசிக்கொண்டே இருக்கலாம்.

தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு, இலவச செல்போனுடன் செல்போன் இணைப்பு வழங்கும் திட்டம், திருப்பூர் மாவட்டம், அவினாசியில், வரு‌ம் 18ஆ‌ம் தேதி தொடங்குகிறது. அவினாசி, பாலங்கரையில் உள்ள இந்தியா நிட்பேர் வளாகத்தில் இதற்கான விழா நடக்கிறது.

விழாவில், இலவச செல்போனுடன் கூடிய செல்போன் இணைப்பு சேவையை, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஆ.ராசா தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரி கூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச செல்போனுடன் மொபைல் இணைப்பு தரப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தில், முதல்கட்டமாக, அவினாசி தாலுகாவில் 1200 பேருக்கு இலவச செல்போனுடன் மொபைல் இணைப்பு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம், ந‌ஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படும் இந்த சமயத்தில், இந்த திட்டத்தில், தனியார் தொலைபேசி நிறுவனங்களையும் இணைத்து இருக்க வேண்டும். இலவச திட்டங்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தை பயன்படுத்தும் நிலையில், லாபம் தரும் திட்டங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, சுமையை மட்டும் பொதுத்துறை ஏற்பது எந்த வகையில் நியாயமாகும்

ஸ்பெக்ட்ரம் கட்டணம், லைசென்சு கட்டணம் என்று அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் கறாராக கேட்டு வாங்குகிறார்கள். தனியாரிடம் கடுமையாக கேட்கும் பட்சத்தில் அவர்கள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு போய்விடுகிறார்கள். இலவச செல்போனுடன் இலவச இணைப்பு வழங்கும் திட்டத்தில் தனியாரும் பங்கேற்க வேண்டும் என்று சொன்னால், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் நிச்சயம் பலன் பெறுவார்கள். அரசு இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும் என்லறா‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...