Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 16, 2010

உலகில் உணவின்றி 100 கோடி மக்கள் அவலம்


உலகில் மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவின்றி 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.பல நாடுகள் தன் பொருளாதார மட்டத்தில் வளர்ச்சியடைந்தாலும் கூட அந்நாடுகளில் வாழ்கின்ற மக்கள் தான் அதிகமாக தற்போதும் பட்டினியில் வாடிவருகின்றனர். உதாரணமாக சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

இறுதியாக சில ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலகில் பட்டினியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.02 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 92.5 கோடி எட்டியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் காணப்படுகின்றனர். மேலும் பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் அதிகமானோர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 20 வீமானோர் உணவுத் தேவையினைப் பூர்த்தி முடியாமல் உள்ளார்கள். இதனை நாம் 2015இல் 10 வீதமாகக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதனை அபிவிருத்தியடைந்த நாடுகளின் உதவியோடு முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக, ஏழை மக்கள் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே இம்மாதம் 24ஆம் திகதி இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...