Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 26, 2010

இன்று இருதய தினம்


ஒவ்வொரு 20 நொடிகளிலும் ஒரு இருதய அட்டாக் ஏற்படுகிறது. இருதய அட்டாக் மூலம் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு மரணம் ஏற்படுகிறது.

மிகவும் குறைந்த வயதிலும் இருதய நோய்க்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரமான சூழலில் நாம் வசித்து வருகிறோம்.

நவீன தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்திய பாதிப்பால் மாறிவரும் வாழ்க்கைமுறை, கொழுப்பு சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்துதல்,
புகைபிடித்தல், நீரழிவு நோய் உள்ளிட்டவை மனித உடலில் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் கட்டுப்பாடின்றி கொண்டு செல்கின்றன.

வாழ்வை அழிக்கும் இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அத்தகையதொரு சூழலை மாற்றி முறையான சிகிட்சைகளை மேற்கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்.

இதயத்தை காக்கும் சில அடிப்படை விஷயங்கள்

1.உணவு பழக்கமுறை - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிகமான புரோட்டீன்

2.உடற்பயிற்சி - இரண்டரை மணிநேரம் நடை பயிற்சி வாரத்திற்கு 5 நாட்கள்.

3.புகை பிடிப்பதை அறவே நிறுத்திவிடுங்கள்

4.உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்

5.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்

6.மது அருந்துவதை முற்றிலும் ஒழித்துவிடுங்கள்

7.கோபத்தைக் கட்டுப்படுத்தி டென்சன் இல்லாத வாழ்க்கையை பழக்கிக் கொள்ளுங்கள்.

இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) 2007-ஆம் ஆண்டிற்கான ஆய்வு தெரிவிக்கிறது.

இதய நோயாளிகளின் எண்ணிக்கைய கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

இருதய நோய் அற்ற உலகத்தை உருவாக்கிட கடுமையாக முயல்வோம்!

source:பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...