Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 05, 2010

கருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்!


முத்துவேலர் + அஞ்சுகம் = கருணாநிதி,

கருணாநிதி + பத்மாவதி = முத்து

கருணாநிதி + தயாளு அம்மாள் = அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு

கருணாநிதி + ராஜாத்தி = கனிமொழி

முத்துவேலர் + அஞ்சுகம் = சண்முகசுந்தரத்தம்மாள்

சண்முகசுந்தரத்தம்மாள் + [....................................] = முரசொலி மாறன், செல்வம்

முரசொலி மாறன் + மல்லிகா = கலாநிதி, தயாநிதி.

சினிமாத்துறையில் ஆதிக்கம்: தமிழில் இப்பொழுது வருகின்ற நான்கில் ஒன்று கருணநிதி குடும்பத்தில் உள்ளவர்களல் தான் எடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதற்கு வேண்டிய விளம்பரம் சன்-குழுமம் சன்-டிவி செனல்களின் வழியாக தாராளமாக செய்யப்படுகிறது. ரூ 800 கோடிகளைத்தாண்டும் தமிழ் சினிமாத்துறை இவ்வாறு இவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்றால் மிகையாகது.

ஊடக சாம்ராஜ்யம்: 95 மில்லியன் / சுமார் 10 கோடி வீடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த செனல்கள், நிச்சயமாக தாக்குதலை மட்டுமல்லாது, ரூ. 2500 கோடி ஆண்டு வருமானத்தை நேரிடை மற்றும் மறைமுகமாக கொண்டுள்ளது. கேபிள் இணைப்பில் மட்டும் 1100 கோடிகள் கிடைக்கின்றன. சென்ற வருடம் 2009-2010 ஒப்பிட்டு, ஜூன் மாதம் 2010 வரை கணக்கிட்டுப் பார்த்ததில் வருவாய் 53% ற்கு உயர்ந்து[1], லாபம் 43% ஆக உள்ளதாம்! இந்தியாவிலேயே இரண்டாவதாக உள்ல ஸ்பைஸ் ஜெட் கம்பெனியின் பங்குகளை வாங்கியுள்ளது[2]. பங்கு வணிகத்திலும் இக்கம்பெனியின் வியாபாரத்தில் கோடிகள் புரளுகின்றன[3].

நூற்றுக்கணக்கான குடும்பக் கம்பெனிகள்: சிபியிடம் தாக்குதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, இவர்கள் வைத்துள்ள கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்ந்திலையில், இப்படி சினிமாத்துறையினையும் அக்டோபஸ் மாதிரி வைத்துப் போட்டுள்ள நிலையில், கருணாநிதியின் சந்ததியினர், அரசியல் பலத்துடன் என்னசெய்வார்கள் என்பது மக்கள்தாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அரசியல்-பொருளாதார யுக்திகள்: உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மூலதனமிட்டு, கருணாநிதி குடும்பத்தால் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அரசியல் ரீதியிலும் தங்களது நிலையை பாதுகாத்துக் கொள்ள திறமையாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பொருட்கள் மற்றும் சேவை சட்டத்தை அமூல் படுத்த எதிர்ப்பு தெரிவித்ததில்[4] அத்தகைய உள்நோக்கம் இருக்கக் கூடும் என்ரு தெரிகிறது.
நன்றி :இந்தியா டுடே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...