Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 23, 2010

காட்டுமன்னார்கோவிலில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் பல்வேறு வளர்ச் சிப் பணிகள் மேற் கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சின்னப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, விஜயன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் பேசப்பட்டது. தார் சாலை, சிமென்ட் சாலை, சிறு பாலங்கள் அமைப் பது உள்ளிட்ட பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...