Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 15, 2010

தலிபான்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் அமெரிக்க படைவீரர்



ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகா மிட்டுள்ளன. அவர்கள் தலிபான் போராளிகளுக்கு எதிரான போரில் ஈடுபட் டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க முகாமில் பெர்க்க தாஹி (24) என்ற வீரரை திடீரென ஆனவில்லை.

மாயமான அவரை தலிபான் போராளிகள் பிடித்து சென்று சிறை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு திடீரென மன மாற்றம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் தலிபான் போராளிகளுக்கு உதவி செய்ய தொடங்கினார். இதாகோ பகுதியில் உள்ள சன் பள்ளத்தாக்கில் அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார்.

மேலும் அவர்களுக்கு வெடி குண்டுகள் தயாரிப் பது, மற்றும் வாகன அணி வகுப்புகளை குண்டு வைத்து தகர்ப்பது, செல்போன்களை ரோட்டோரம் குண்டுகளை வெடிக்க செய்யும் ரிமோட் கண்ட்ரோல்களாக மாற்றுவது குறித்து பயிற்சி கொடுத்துள்ளார்.
இந்த தகவலை பக்திகா மாகாண தலிபான் துணை கமாண்டர் ஹாஜி நதீம் தெரிவித்துள்ளார். இதை ஆப்கானிஸ்தானின் உளவுத் துறையும் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க வீரர் பெர்க்தாகி குறித்த தகவல்களை தெரிவித்த 2 உளவாளிகளை தலிபான்கள் கொன்றதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரை மீட்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக உள்ளது. மலைப் பகுதியில் உள்ள தலிபான்களின் முகாம்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...