Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2010

குரானை எரித்தால் பின்விளைவுகள் ஏற்படும்"



அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சிறிய கிறித்தவ திருச்சபைக்குழு ஒன்று தான் ஏற்கனவே அறிவித்தபடி புனித குரானின் பிரதிகளை எரித்தால், அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று, ஆப்கானிஸ்தானில் இருக்கும் சர்வதேசப் படைகளின் தளபதி, ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் நினைவு நாளில் குரானின் பிரதிகளை எரிக்கப் போவதாக அந்த கிற்ஸ்தவ அமைப்பு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இந்த திருச்சபையின் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதற்கு கட்டுப்படுத்த முடியாத முஸ்லிம் பதிலடி அளிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இரான் எச்சரித்துள்ளது.

சுதந்திரம் என்ற பெயரில், வழிபாட்டுக்குரிய பொருட்கள் அவமதிக்கப்படுவதை மேலை நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று இரான் கூறியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...