Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 02, 2010

TNTJ மேலான்மை குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதின் அவர்களின் கடலூர் மாவட்ட விசிட்

செயல்வீரர்கள் கூட்டம்
அல்லாஹ்வின் கருனையால் சென்ற 29.05.2010 அன்று கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் மூசா தலைமையில் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.ஜைனுல்ஆபிதின் அவர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து இருந்து அதிகமான மக்களை திரட்டுவது என்றும் மாநாட்டிற்கான பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. இதில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்களும் கலந்து கொண்டார்.

கொள்ளுமேடு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகள் த.யாசின், ஜாவித் ,ரஜ்வீ,நஜ்முத்தீன் மற்றும் தாயகம் சென்றுள்ள பைஜுர்ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


பத்திரிக்கையாளர் சந்திப்பு
அல்லாஹ்வின் கிருப்பையால் கடந்த 29.05.2010 (சனிக்கிழமை) பத்திரிக்கையாளர் சந்திப்பு (PRESS MEET) கடலூரில் நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலான்மை குழு உறுப்பினர் பீ. ஜெயினுல் ஆப்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது...

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ கமிஷன்கள் அமைக்கபட்டு ஒரு பலனும் இல்லை.

இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதற்காக ஒய்வு பெற்ற நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இந்தியா முழுவதும் வலம் வந்து முஸ்லிம்கள் அடிதட்டு நிலையில் உள்ளனர். அவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உடன் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டதை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்க பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

எனவே முஸ்லிக்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தி ஜீலை 4-ந் தேதி சென்னை தீவுத் திடலில் பேரணி, மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த மாநாட்டில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினால் உங்களுக்கு (காங்கிரஸ்) வாக்களிப்போம், இல்லை என்றால் எதிராக வாக்களிப்போம் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற உள்ளோம்.
இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலான்மை குழு உறுப்பினர் பீ.ஜெனுல் ஆப்தின் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அப்துல்ரசாக் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நலம் விசாரித்தல் :
கடலூரில் தர்கா ரெளடிகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்ட ஜாபர் தற்போது அல்லாஹ்வின் கிருப்பையால் தற்போது குனம் அடைந்து வருகிறார். அவர்களை மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.ஜைனுல்ஆபிதின் அவர்கள் ஜாபர் அவர்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். அவர்களுடன் பொதுச் செயலாளார் அப்துல் ஹமீது, மாவட்ட பேச்சாளர் ஃபாஜல் ஹீசைன், அபுதாபி யூசுப் அலி , மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் உடன்யிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...