Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 08, 2010

சிதம்​ப​ரத்​தில் தொட​ரும் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி



சிதம்​ப​ரம் நக​ரில் அனைத்து சாலை​க​ளும் இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றப்​பட்​ட​தால் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்டு தினந்​தோ​றும் விபத்​து​கள் நடக்​கின்​றன.​÷கு​றிப்​பாக மேல​ரத வீதி,​​ தெற்​கு​ரத வீதி,​​ சபா​நா​ய​கர் தெரு,​​ போல்​நா​ரா​ய​ணன் தெரு ஆகி​யவை ஒரு​வ​ழிப் பாதை​யாக இருந்​தன.​ தற்​போது நகர காவல் துறை​யி​னர் அவற்றை ​ இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றி​ய​தால் இரு​பு​ற​மும் வாக​னங்​கள் செல்​வ​தால் தினந்​தோ​றும் விபத்து நடக்​கி​றது.​

மே​ல​ர​த​வீதி இரு​பு​ற​மும் நடை​பாதை வியா​பா​ரி​க​ளால் ஆக்​கி​ர​மிக்​கப்​பட்​டுள்​ளது.​ அதன் பின்​னர் நிறுத்​தப்​ப​டும் வாக​னங்​களை தாண்டி போக்​கு​வ​ரத்​துக்கு குறு​கிய சாலையே உள்​ளது.​ இந்​நி​லை​யில் அச்​சாலை இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றப்​பட்​ட​தால் கடும் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது.​ ​வ​டக்​கு​ரத வீதி​யில் நிறுத்​தப்​ப​டும் லாரி​க​ளா​லும்,​​ கீழ​ரத வீதி​யில் நிறுத்​தப்​ப​டும் சுற்​று​லாப் பய​ணி​க​ளின் வாக​னங்​க​ளா​லும் அப்​ப​கு​தி​யில் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்டு அடிக்​கடி விபத்​து​கள் ஏற்​ப​டு​கின்​றன.​

சிதம்​ப​ரம் மற்​றும் அண்​ணா​மலை நக​ரில் ஆட்​டோக்​க​ளின் எண்​ணிக்கை மிக அதி​கம்.​ இவற்​றில் பாதிக்​கும் மேலான ஆட்​டோக்​கள் பர்​மிட்,​​ லைசென்ஸ்,​​ காப்​பீடு இல்​லா​மல் இயக்​கப்​ப​டு​கின்​றன.​÷அ​ள​வுக்கு அதி​க​மாக இயங்​கும் மினி​டோர் லாரி​கள்,​​ ஆட்​டோக்​க​ளி​னால்​தான் சிதம்​ப​ரம் நக​ரில் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​ப​டு​கி​றது.​ ​÷மே​ல​ரத வீதி,​​ தெற்​கு​ரத வீதி,​​ பஸ் நிலை​யம் பகு​தி​யில் ஆட்​டோக்​கள் சவா​ரியை தேடி எதி​ரும்,​​ புதி​ரு​மாக செல்​வ​தால் பாத​சா​ரி​க​ளும்,​​ இரு​சக்​கர வாக​னங்​கள் ஓட்​டு​வோ​ரும் கடும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​÷அ​ரசு மருத்​து​வ​மனை,​​ அண்​ணா​ம​லைப் பல்​கலை மற்​றும் சீர்​காழி,​​ மயி​லா​டு​துறை ​ உள்​ளிட்ட பகு​தி​க​ளுக்​குச் செல்​லும் முக்​கி​யத் தெரு​வான போல்​நா​ரா​ய​ணன் தெரு​வில் உள்ள ஹோட்​ட​லுக்கு வரும் வாக​னங்​கள் முழு​வ​தும் சாலை​யி​லேயே நிறுத்​தப்​ப​டு​வ​தால் அத்​தெ​ரு​வில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து ஸ்தம்​பித்து பொது​மக்​கள் பெரும் அவ​தி​குள்​ளா​கின்​ற​னர்.​ ​

ஹோட்​ட​லுக்கு பார்க்​கிங் வசதி இல்​லா​த​தால் அனைத்து வாக​னங்​க​ளும் சாலை​யி​லேயே நிறுத்​தப்​ப​டு​கின்​றன.​ ​ ​காவ​லர்​கள் பற்​றாக்​குறை:​​ சிதம்​ப​ரத்​தில் போக்​கு​வ​ரத்து காவல் நிலை​யம் தொடங்​கப்​பட்​டும் போதிய இடம்,​​ போதிய காவ​லர்​கள் இல்​லா​த​தால் அவர்​க​ளால் போக்​கு​வ​ரத்து நெருக்​க​டியை போக்க முடி​ய​வில்லை.​ ​சிதம்​ப​ரம் போக்​கு​வ​ரத்து காவல் நிலை​யத்​துக்கு ஒரு இன்ஸ்​பெக்​டர்,​​ 2 சப்-​இன்ஸ்​பெக்​டர்​கள்,​​ 16 போலீ​ஸôர் இருக்க வேண்​டும்.​ ஆனால் தற்​போது ஒரு இன்ஸ்​பெக்​டர்,​​ ஒரு சப்-​இன்ஸ்​பெக்​டர்,​​ 6 போலீ​ஸôர்​தான் பணி​யாற்​று​கின்​ற​னர்.​ எனவே கூடு​த​லாக போலீ​ஸôர் நிய​மிக்க வேண்​டும்.​

பள்ளி,​​ கல்​லூ​ரிக்கு செல்​லும் மாணவ,​​ மாண​வி​யர்​கள்,​​ முதி​யோர் இந்த போக்​கு​வ​ரத்து நெருக்​க​டி​யி​னால் கடும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​ எனவே கட​லூர் மாவட்ட போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் சிதம்​ப​ரம் நக​ரின் போக்​கு​வ​ரத்தை கட்​டுப்​ப​டுத்த நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என சிதம்​ப​ரம் நக​ர​வா​சி​கள் எதிர்​பார்ப்​பில் உள்​ள​னர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...