Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2010

இ-குப்பைகளின் ஆபத்து அதிகரிப்பு

மொபைல் போன், கம்ப்யூட்டர், இன்ன பிற மின்னணு (எலக்ட்ரானிக்) சாமான்கள் அதிகரிக்க அதிகரிக்க அதன் கழிவுகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்த இ-குப்பைகளினால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

மொபைல் போன், கம்ப்யூட்டர், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃப்ரிட்ஜ்), ஏ.சி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகம் உபயோகப்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் இது பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

இ-குப்பைகளை மறுசுழற்சி (Recycling) செய்து உபயோகம் செய்யக் கூடிய ஒன்றிரண்டு திட்டங்கள் பெங்களூரில் துவக்கப்பட்டுள்ளது என்றாலும் இது பரவலாக்கப்படவில்லை.
2020 ல் இந்தியாவில் பழைய கம்பயூட்டர்களின் எண்ணிக்கை 2007 ஐ விடவும் 500 மடங்கு அதிகரிக்குமாம்!


அதே போல் பழைய மொபைல் போன்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிக்குமாம்.

உலக அளவில் 40 மில்லியன் டன் இ-குப்பைகள் வருடந்தோறும். உருவாகின்றது.


மொபைல் போன்களின் அசுர வளர்ச்சி தான் இந்த அளவுக்கு இ-குப்பைகள் பெருகுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

இரண்டு நபர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 2008 ல் மட்டும் 150 மில்லியன் மொபைல் ஃபோன்கள் அமெரிக்காவில் கழிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...