Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2010

இஸ்ரேலிய தொடர்புகளை முடிவுக்கு கொண்டுவரும் துருக்கி

இஸ்தான்புல்:ராணுவ ஒப்பந்தங்கள், வர்த்தகத்துறை பரிமாற்றங்கள் என அனைத்து இஸ்ரேலிய தொடர்புகளை துருக்கி முடிவிற்கு கொண்டுவர பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் ஆங்கில நாளிதழ் ‘ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை துருக்கி திரும்ப அனுப்பாது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ம் தேதியன்று, துருக்கி நிவாரணக் கப்பல் தாக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேலுடனான தன் எதிர்காலத் திட்டங்களை துருக்கி மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்கள் துருக்கி பாராளுமன்றத்தில் விவாதங்களில் உள்ளன.

துருக்கி கப்பல் தாக்கப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் ஐ.நா.வின் விசாரணையை ஏற்கும் வரை துருக்கி அரசு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்பாது என்றும், சுமார் $7.5 மில்லியன் மதிப்புடைய இஸ்ரேலிய ராணுவத் திட்டங்களை முடிவிற்கு கொண்டுவருவது என பல முடிவுகள் விரைவில் தீர்மானகளாக துருக்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளதாக அந்நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...