மொத்தம் 24 இடங்களில் டிஜிட்டல் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் துணிவோடும் ஆர்வத்துடனும் சிறப்பாக திட்டமிட்டு செயல்ப்பட்டு வருகின்றனர்.

சிதம்பரம் நகரில் அனைத்து சாலைகளும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தினந்தோறும் விபத்துகள் நடக்கின்றன.÷குறிப்பாக மேலரத வீதி, தெற்குரத வீதி, சபாநாயகர் தெரு, போல்நாராயணன் தெரு ஆகியவை ஒருவழிப் பாதையாக இருந்தன. தற்போது நகர காவல் துறையினர் அவற்றை இருவழிப் பாதையாக மாற்றியதால் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் தினந்தோறும் விபத்து நடக்கிறது.
மேலரதவீதி இருபுறமும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிறுத்தப்படும் வாகனங்களை தாண்டி போக்குவரத்துக்கு குறுகிய சாலையே உள்ளது. இந்நிலையில் அச்சாலை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடக்குரத வீதியில் நிறுத்தப்படும் லாரிகளாலும், கீழரத வீதியில் நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவற்றில் பாதிக்கும் மேலான ஆட்டோக்கள் பர்மிட், லைசென்ஸ், காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன.÷அளவுக்கு அதிகமாக இயங்கும் மினிடோர் லாரிகள், ஆட்டோக்களினால்தான் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ÷மேலரத வீதி, தெற்குரத வீதி, பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோக்கள் சவாரியை தேடி எதிரும், புதிருமாக செல்வதால் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.÷அரசு மருத்துவமனை, அண்ணாமலைப் பல்கலை மற்றும் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியத் தெருவான போல்நாராயணன் தெருவில் உள்ள ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் முழுவதும் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் அத்தெருவில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகின்றனர்.
ஹோட்டலுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. காவலர்கள் பற்றாக்குறை: சிதம்பரத்தில் போக்குவரத்து காவல் நிலையம் தொடங்கப்பட்டும் போதிய இடம், போதிய காவலர்கள் இல்லாததால் அவர்களால் போக்குவரத்து நெருக்கடியை போக்க முடியவில்லை. சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 16 போலீஸôர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 6 போலீஸôர்தான் பணியாற்றுகின்றனர். எனவே கூடுதலாக போலீஸôர் நியமிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், முதியோர் இந்த போக்குவரத்து நெருக்கடியினால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிதம்பரம் நகரின் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிதம்பரம் நகரவாசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி).
இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபால்:"தங்களுக்கு தீராத துயரத்தை பரிசாக அளித்த எல்லோரையும் தூக்கிலிடுங்கள்" 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு ஆறு லட்சம் பேர் பாதிப்படையவும் காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கின் தீர்ப்பைக் கேட்டு ஹமீதாபி ஆவேசமடைந்து கூறிய வார்த்தைகள் இவை.
போபால் விஷவாயு துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் கறுப்புதினம் என நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்தவர்கள் உரக்க கூறினர்.மரணத்தின் குளிர்ந்த கரங்கள் தங்களுடைய காலனிகளை தேடிவந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த கோர சம்பவம் நிகழ்ந்த இரவை நினைவுக் கூறும்பொழுது அவர்களுடைய முகத்திலிருந்து இதுவரை மிரட்சி மாறவில்லை.இச்சம்பவம் நிகழ்ந்தபொழுது ஹமீதாபீக்கு 28 வயதாகியிருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் தூக்கிலிட்டால்தான் முழுமையான நீதி கிடைக்கும் என அவர் கூறுகிறார்.
தற்சமயம் சிறிதளவேனும் மன அமைதிக்கிடைப்பதற்காக இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளின் உருவப் பொம்மைகளை தூக்கிலிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஹமீதாபீயும் அவரைச் சார்ந்தவர்களும்.அன்றைய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டேர்சன் உள்ளிட்ட 64 பேரின் உருவங்களை பல்வேறு இடங்களில் நாங்கள் தூக்கிலிடுவோம் என போபால் விஷவாயு துயரச்சம்பவத்தில் தனது 6 வயது மகனையும், மாமியாரையும் இழந்த ஷம்ஷாபீ கூறுகிறார்.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் எதிரேயுள்ள ஜெ.பி.நகரில்தான் அன்று 23 வயதாகியிருந்த ஷம்ஷாபீ வசித்துவந்தார்."எங்களுக்கு பொருளாதார உதவி தேவையில்லை. குற்றவாளிகளை தூக்கு மரத்திற்கு அனுப்புவதுதான் எங்களது கோரிக்கை" அந்த துயர சம்பவத்தில் கணவனை இழந்த சாந்திதேவி கூறுகிறார்.இப்பிரதேசம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கும் பொழுது இந்த துயரத்திற்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் இந்தியாவில் சுதந்திரமாக வியாபரம் செய்கிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர் அளிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பிரதமர் மன்மோகன்சிங்கின் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என குற்றஞ்சாட்டுகிறார் இந்த துயர சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான ஸஃப்ரீன்கான்.
பெயரளவிலான நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியேயும், போபாலின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் தலைமையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
செய்தி:பாலைவன தூது
வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துவிட்டு செல்லும் வகையில் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. இதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, தில்லி உள்பட 8 இடங்களில் குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைக்காக வெளிநாடு செல்லும் தனி நபர்களும், வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் செல்பவர்களும் இந்த அலுவகத்தில்தான் விசா கிளியரன்ஸ் பெற வேண்டும்.இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய குடியுரிமை பாதுகாவலர் உள்பட 6 அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் போலி முகவர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை நம்பி அப்பாவி இளைஞர்கள் பல லட்சங்களை ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தைப் போல் தனி அதிகாரத்துடன் இது செயல்படும்.இந்த ஆணையம் குறித்து குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது;'குடிபெயர்வோர் நிர்வாக ஆணையம் அமைக்கப்படுவதன் மூலம், குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர், விசா கிளியரன்ஸ் பெற வேண்டிய அவசியமே இருக்காது. விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு விடும்.வெளிநாடு செல்வோர் அமைச்சக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, வெளிநாடு சென்று விடலாம். ஆனால், இந்த இணைய தள பதிவை, உரிமம் பெற்ற ஆள் தேர்வு முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே இணைய தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.முகவர்களை மட்டும் கண்காணித்தால் போதும் என்ற நிலையை உருவாக்குவதற்காக, இதுபோன்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதனால் ஊழல் தடுக்கப்படுவதோடு,போலி முகவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படும்.இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.'மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்வோரையும் கண்காணிக்கவும், அதுதொடர்பான முகவர்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
நன்றி :பாலைவனதூது
குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார். இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில் 15 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்,இந்த கப்பல்கள் இன்னும் 2 வாரங்களில் காஸ்ஸா போய் சேரும் என்றும் அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்த கப்பலையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
source:presstv
லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு வருகைத்தர அந்நாட்டு அரசு விசா அனுமதியளித்ததற்கு அந்நாட்டின் பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளன.ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன பத்திரிகைகளும்,சில அமைப்புகளும்.
லண்டனில் வெம்ப்ளி அரினா, ஷெஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முறை டாக்டர் ஜாஹிர் நாயக் உரை நிகழ்த்தவிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு சென்றபொழுது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி டேவிட் டோஸ் உள்ளிட்டோர் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.கன்சர்வேடிவ்கள் நாட்டை ஆளும்பொழுது ஜாஹிர் நாயக்கிற்கு விசா அனுமதித்தது அநியாயம் என டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.இதுக்குறித்து உள்துறைச்செயலாளர் தெரசாமே கூறுகையில்,"ஜாஹிர் நாயக் மீது எவ்வித தீவிரவாத வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. அதுவரை அவருக்கு பிரிட்டன் விசா வழங்கும்" என தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்
நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் புறப்பட்ட 'Freedom Flotilla' என்ற பெயருடன் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலால் திறந்த சிறையாக மற்றப்பட்ட காஸா மக்களுக்காக உணவுப்பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 10000டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் துருக்கி கிரீஸ் உட்பட பல நாட்டு சமூக ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல் சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.
கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL JAZEERA தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள் ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும் வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.
வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.
உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.
நன்றி:வாலைவன தூது
கொள்ளுமேடு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகள் த.யாசின், ஜாவித் ,ரஜ்வீ,நஜ்முத்தீன் மற்றும் தாயகம் சென்றுள்ள பைஜுர்ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 5 ஆயிரத்து 187 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டின் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணி தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ம் தேதிவரை நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் வழக்கம் போலின்றி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் சேகரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் எளிதாக செய்திட 4 ஆயிரத்து 121 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஏழு தாசில்தார்கள், ஐந்து நகராட்சி கமிஷனர்கள், நெய்வேலி துணை பொது மேலாளர் (கல்வி) ஆகியோர் தலைமையில் 4 ஆயிரத்து 36 ஊழியர்களும், 751 கண்காணிப்பாளர்களும் ஈடுபடுகின்றனர். இவர்கள் தினசரி 100 முதல் 150 வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர்கள், உறவுமுறை, பாலினம், வயது, தொழில், ஆண்டு வருமானம், கல்வித் தகுதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி மாவட்டத்தில் முழுமையாக செய்து முடித்திட, கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் கேட்கும் விபரங்களை வீட்டில் உள்ளவர்கள் தெரிவிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெயரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும். முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கெதிராக விசாரணை நடத்தவேண்டும் என்றும், காஸ்ஸாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே விலக்க வேண்டும் என்றும் ஐரோப்பியன் யூனியன் கோரியுள்ளது.
இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக கண்களை திறக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் வரம்பு மீறிய நடவடிக்கை என அரப் லீக் கூறியுள்ளது.இஸ்ரேலுக்கெதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 22 உறுப்பினர்களின் கமிட்டி உடனடியாக கூடும் என அரப் லீக்கின் தலைவர் அம்ர் மூஸா தெரிவித்தார்.
இஸ்ரேலின் செயலை கூட்டுப்படுகொலை என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வர்ணித்துள்ளார். மரணித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மனிதத்தன்மையற்ற தாக்குதல் மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தங்களுடைய கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது என இச்சம்பவத்தை கண்டித்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்த கிரீஸ் இஸ்ரேலுடனான ஒருங்கிணைந்த கப்பற்படை பயிற்சியை ரத்துச் செய்தது. கிரீஸ் நாட்டைச் சார்ந்த 30 பேர் தாக்குதல் நடந்த கப்பலில் இருந்தனர்.எம்.பி உட்பட 16 குடிமக்கள் கப்பலிருந்தனர் எனக்கூறிய குவைத் இஸ்ரேலின் நடவடிக்கையை கொடூரமானது என வர்ணித்துள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கையை நியாயப்படுத்தமுடியாது என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பர்ணாடு குஷ்னரும், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாட்டர் வெலும் கூறினர்.இஸ்ரேலுக்கெதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஹிஸ்புல்லாஹ்வின் உதவியை நாடப்போவதாக லெபனானின் மனித உரிமை பணியாளர் மஹீன் பஷர் தெரிவித்தார். இஸ்ரேலை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு தெரியுமென்றும் சூழலுக்கு தகுந்தவாறு அவர்கள் பதிலடிக் கொடுப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமாதான பணியை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் கொடூரத்திற்கெதிராக உலகம் முழுவதும் கண்டன பேரணிகள் நடைபெற்றன.லண்டனில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். துருக்கியில் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இஸ்தான்புல்லில் தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்தது.50 நாடுகளிலிருந்து எம்.பிக்கள் உள்ளிட்ட 700 பேர் நிவாரண கப்பல்களில் இருந்தனர். ஃப்ரீடம் ஃப்ளோடில்லா என்று அழைக்கப்பட நிவாரண கப்பலில் 581 பேரில் 400 பேரும் துருக்கியை சார்ந்தவர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்