Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 22, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் திங்கட்கிழமை வெளியிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் பெற்றுக் கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சினேகலதா, கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அமுதவல்லி கூறியது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அருகில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவட்டத்தில்

8,21,685 ஆண்கள்,
7,93,791 பெண்கள் மொத்தம் 16,15,476 வாக்காளர்கள் உள்ளனர்.அதில் ஐந்து நகராட்சிகளில் 1,31,524 ஆண் வாக்காளர்களும், 1,32,851 பெண் வாக்காளர்களும் மொத்தம் 2,64,375 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்,

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சிதம்பரம் ஆகிய நகராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

விருத்தாசலம் நகராட்சியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 16 பேரூட்சிகளில்

91,881 ஆண்கள்,
88,094 பெண்கள்
மொத்தம் 1,79,975 வாக்காளர்களும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில்

5,98,280 ஆண்கள்,
5,72,846 பெண்கள்
மொத்தம் 11,71,126

வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மட்டும் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக ஐந்து நகராட்சிகளில்

329 ஓட்டுச்சாவடிகளும், 1

6 பேரூராட்சி பகுதிகளில் 276 ஓட்டுச்சாவடிகளும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில் 2,772 ஓட்டுச்சாவடிகள்

மொத்தம் 3,377 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...