Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 12, 2011

ஒரிசா பேய் மழையில் 2600 கிராமங்கள் மிதக்கிறது; வீடு இடிந்து 8 பேர் பலி

ஒரிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள மகாநதி உள்பட எல்லா நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஒரிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக உள்ளது. சுமார் 2600 கிராமங்கள் மழை தண்ணீரால் சூழப்பட்டு மிதக்கிறது.

அந்த கிராமங்களில் வசித்து வரும் சுமார் 11 லட்சம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 61 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக ஒரிசாவில் பல்லாயிரக் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகி விட்டன. அவற்றில் சிக்கி 8 பேர் பலியாகி விட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் கதி என்ன? என்று தெரிய வில்லை. மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...