Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 09, 2011

ரத்த அழுத்தம் பெரியவர்களுக்கு மட்டும்தானா ? பணக்கார நோயா?

குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன, சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை, புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை திகைக்க வைக்கிறது.

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு… ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதெல்லாம் ‘பணக்கார நோய்கள்’. ஆனால், கால மாற்றத்தில்… ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் கடந்து, எல்லோரையும் அவை வருத்திக் கொண்டிருக்கின்றன சமீப வருடங்களாக. அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக, இப்போது டீன் ஏஜ் மற்றும் சிறுவயது குழந்தைகளையும் அந்த நோய்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருப்பது… கொடுமையிலும் கொடுமை!

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்டம் கேட்டபோது, “குழந்தைகளுக்குக்கூட இம்மாதிரியான பெரும் பிரச்னைகள் வருவதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மரபியல் காரணி…” என்று முக்கியமானவற்றை பட்டியலிட்டார்.

சரியான நேரத்தில் உணவு, உறக்கம், காற்றோட்டமான சூழ்நிலை மாலையில் விளையாட்டு போன்ற சூழ்நிலைகளை பெரியோர்களான நாம்தான் உருக்குவாக்கி கொடுக்கவேண்டும்., என்ன இதன்படி செய்வோமா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...