Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 21, 2011

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி கொல்லப்பட்டார்

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி செவ்வாய்க்கிழமையன்று காபூலில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி. ஆப்கனில் சமாதான பேச்சுவார்த்தைக்கு உருவாக்கப்பட்டுள்ள உயர் அமைதி குழுவின் தலைவராக இருந்து வருகிறார் .குண்டு வெடிப்பு நடந்த போது அவர் தலிபான் பிரதிநிதிகளுடன் பேசி கொண்டிருந்தார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . "ரப்பானி தியாகிவிட்டார் ," என காபூலில் குற்ற புலனாய்வு துறை தலைவர் முகமது ஜாகிர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு தனது நண்பராக செயல்பட்டு வந்த ரப்பானி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.ரப்பானி, தலிபான் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...