Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 10, 2011

இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து!!

ஜெருசலம்:லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அடியில் இஸ்ரேல் பூமியைத் தோண்டுவதால் அல் அக்ஸாவிற்கு ஆபத்து என அல்-ஊதில் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிவி நிரூபர் கூறியுள்ளதாவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அகழ்வானது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் முஸ்லிம் உலகத்தின் தனித்துவமிக்க சின்னமான மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு பெரிய ஆபத்தாக அமையும் எனக் கூறியுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரேபிய யுத்தத்தில் பழமை வாய்ந்த அல் ஊத் நகரம் இஸ்ரேலால் கைப்பற்றப் பட்டதிலிருந்து இவ்வகழ்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டுவருவதும் இதற்கு முஸ்லிம் உலகம் ஆட்சேபித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



இதுத் தொடர்பாக ஹிஸ்புல்லாவின் அறிக்கையில் கூறியுள்ளதாவது இந்த அகழ்வுப் பணியால் அல் அக்ஸாவின் அடித்தளம் பலகீனம் ஆகி வருவதாகவும் அது எந்த தருணத்திலும் விழுந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் அமைதிக் காப்பது இந்த குற்றத்தில் பங்கு கொண்டர்வகளாக அவர்களை ஆக்குகிறது என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த அகழ்விற்கு எதிராக அரப் லீக்கும், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் அணைத்து பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு அனைத்து முஸ்லிம்களிடமும் இஸ்ரேலின் இந்த பணியை தடுக்க வேண்டும் என்றும் அல் அக்ஸாவின் அடித்தளத்தை மேலும் திடமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

அல் அக்ஸா தற்போது நிலைகுலையும் சூழலில் இருப்பதால் அணைத்து தரப்பினரும் மஸ்ஜித் அல் அக்ஸாவை காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

 செய்தி :- thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...