Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 12, 2011

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளில் நடந்த தற்கொலை தாக்குதலில் 4808 பேர் பலி

லாகூர், செப். 12-
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. அதைத் தொடர்ந்து அவர் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் மற்றும், ஆப்கானிஸ்தானில் தலைமறைவானார். எனவே, அமெரிக்க படைகள் இங்கும் அவரை தேடிவந்தனர்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கு வெடி குண்டு வைத்தம், தற்கொலை தாக்குதல்கள் நடத்தியும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி வருகின்றனர். 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை அதாவது 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 303 தற்கொலை தாக்குதல்கள் மூலம் தலிபான் தீவிரவாதிகள் மனித குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். அதில் 4,808 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 149 பேர் படுகாயம் அடைந்து தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 41 தற்கொலை தாக்குதல்களில் 857 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டில் 36 தாக்குதல்களில் 601 பேர் இறந்துள்ளனர். இந்த தகவல் உள்துறை அமைச்சக குற்ற ஆவணங்களில் பதிவாகி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...