Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 14, 2011

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும்


வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.  

மூட்டு வலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை போக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அந்த மாத்திரைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
 
 இதுகுறித்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் இங்யங் ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
 
 அவர்களில் வலி நிவாரணத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களில் 51 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...