Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 18, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 அல்லது 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டன. கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அக்டோபர் 19 அல்லது 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. திருச்சி மேற்கு இடைத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுவதால் அதற்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
நாளை வாக்காளர் பட்டியல்:

இதற்கிடையே, நாளை வாக்காளப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான சாதாரணத் தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று

வருகின்றன. நடப்பு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்கள் வெளியிடும் பணி இறுதி நிலையில் உள்ளது.

புகைப்பட வாக்காளர் இறுதி பட்டியல்கள் 19-9-2011ல் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட உள்ளன. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடல் குறித்தான அறிவிப்புகள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல். திருத்தம் குறித்தான பொது மக்களின் கோரிக்கைகளை உரிய படிவங்களில் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் (வருவாய் கோட்டாட்சியர்) சமர்ப்பித்து உரிய ஆணைகள் வெளியிடப்பட்ட உடன் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலுக்கு உரிய துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை தொடர்புடைய. சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பட்டியலில் உள்ள அனைவரும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் 2011ல் வாக்கு அளிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்த விதிகளின்களின்படி, தமிழ்நாடு ஊராட்சித் தேர்தல் விதிகள் 1995ன் விதி 21 மற்றும் தமிழ்நாடு பேரு்ராட்சிகள். மு்ன்றாம் நிலை நகராட்சிகள். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 2006ன் விதி 19 ஆகியவற்றின்படி உரிய திருத்தங்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும், பொதுமக்கள் தேவைப்படின் திருத்தங்கள் குறித்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாணையத்திற்கு அனுப்புதல் கூடாது. நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தகுதியுள்ள எவரும் வாக்களிக்க இயலாதநிலை இருக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...