Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 22, 2011

அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் பணிபுரியவிருப்பம் தெரிவித்து ஏராளமானோர் பதிவு

கடலூர்:அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் நேற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய குவிந்தனர்.தமிழகத்தில் அரசு கேபிள் "டிவி' நிறுவனம் கடந்த 2ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை நிர்வகிக்கும் வகையில், டெக்னிக்கல் உதவியாளர்கள், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது.அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 22ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர். கடந்த 8ம் தேதி முதல் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்ய குவிந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...