Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 06, 2011

தொல்லை அழைப்புக்கு 27ம் தேதி முதல் விடிவு

புதுடெல்லி : செல்போனில் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களை சமாளிப்பதில் ஒரு வழியாக இந்த மாதம் 27ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கிறது. ‘140’ என்று தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், எஸ்எம்எஸ்களை அன்று முதல் அடையாளம் கண்டு தவிர்க்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. செல்போனில் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

அவற்றை தடுக்க டிராய் இதுவரை எடுத்த நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ஒரே லேண்ட்லைன் நம்பரையும், செல்போனில் ‘140‘ என்று தொடங்கும் எண்ணையும் அது ஒதுக்கியுள்ளது. எனவே, அழைப்பு வரும்போது அந்த நம்பரை அடையாளம் கண்டு தொல்லை அழைப்பை தவிர்த்து நிம்மதி அடையலாம். இந்த எண்ணை நடைமுறைப்படுத்தும் நிர்வாக பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே, 27ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது. செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை நம்நாட்டில் 80 கோடியை தொட்டுள்ளது.
அதற்கேற்ப தொல்லை அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், அலுவலக விஷயமாக பேசும் அழைப்புகளை விட நமக்கு தொடர்பில்லாத இந்த தொல்லை அழைப்புகளே தினசரி அதிகமாக இருக்கின்றன. இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்‘க்கு புகார்கள் குவிந்தன. இதை தடுக்க போன் நிறுவனங்களுடன் டிராய் பலமுறை ஆலோசனை நடத்தியது. பல விதிமுறைகளை வெளியிட்டது.

‘அழைக்காதீர்‘ பதிவேடு ஏற்படுத்தியது. அதில் வாடிக்கையாளர்களை பதிவு செய்ய கேட்டுக் கொண்டது. ஆனால், பதிவு செய்த பிறகும் தொல்லை அழைப்புகள் அதிகமானதே தவிர குறையவில்லை.இதனால், மீண்டும் புகார்கள் குவிந்தன. இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி கடந்த சில மாதங்களாக டிராய் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி, லேண்ட்லைன் போனில் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கென எளிதில் அடையாளம் காணக்கூடிய லேண்ட்லைன் எண்களை ஒதுக்குமாறு தொலைத் தொடர்பு துறையிடம் (டிஓடி) அது கேட்டுள்ளது.செல்போன்களில் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் ‘140‘ என்ற எண்ணுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவழியாக இது 27ம் தேதி முதல் அமலுக்கு வருவதால் செல்போன் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...