Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 09, 2011

திங்கள்கிழமை அமைச்சரவை மாற்றம்- சோனியாவுடன் மன்மோகன் ஆலோசனை

டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் திங்கள்கிழமை மாறுதல் செய்யவுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியுடன் இன்று பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார். அதன் விவரத்தை அவர் பிரமதருக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இதையடுத்து சோனியாவை சந்தித்தார் பிரதமர்.

திமுக சார்பில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனரா என்பது இதன் மூலம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

நீண்ட நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் திடீரென தெலுங்கானா விவகாரம் குறுக்கிட்டு விட்டதால் அது தள்ளிப் போடப்பட்டதாக தகவல்கள் கூறின. இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் திங்கள்கிழமை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த அமைச்சரவையில் ராசா, தயாநிதி மாறனுக்குப் பதிலாக புதிதாக 2 அமைச்சர்களை திமுக அறிவிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்துத்தான் இன்று கருணாநிதியுடன் பிரணாப் பேச்சு நடத்தினார்.

ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அவருக்குப் பதில் புதிய அமைச்சரை நியமிக்க வேண்டியுள்ளது. இது போக சில அமைச்சர்கள் நீக்கப்படலாம், சிலரின் துறைகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

சோனியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் இறுதி செய்யவுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...