Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 16, 2011

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில்-சென்ஸஸ் அறிக்கை

புதுடெல்லி:இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில் என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை வளர்ச்சியில் போதுமான குறைவு ஏற்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.

121 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 83.3 கோடி பேர் வசிப்பது கிராமங்களிலாகும். 37.7 கோடி மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு கிராம-நகர பகுதிகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகைத்தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று வெளியிட்டார்.

2001-ஆம் ஆண்டு 27.81 சதவீதமாக இருந்த நகரமயமாக்கத்தின் சதவீதம் 2011 ஆம் ஆண்டு 31.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கிராமங்களில் மக்கள் தொகை சதவீதம் 72.19 சதவீதத்திலிருந்து 68.81 சதவீதமாக குறைந்துள்ளது.

மக்கள் தொகையில் ஏற்பட்ட குறைவு கிராமங்களில் மக்கள் தொகை சதவீதத்தில் குறைவு ஏற்படுவதற்கு காரணம் என சென்ஸஸ் கமிஷனர் சி.சந்திரமெளலி தெரிவித்துள்ளார். கிராமங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ள மாநிலம் உத்தரபிரதேசமாகும் (15.5 கோடி). 5 கோடி பேர் வசிக்கும் மும்பை மக்கள் தொகை அதிகமான நகரமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...