Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 24, 2011

காப்பீட்டு திட்டத்தில் சேர புதிய நிபந்தனை: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம்; வி.ஏ.ஓ. சான்றிதழ் வேண்டும்


முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் செலவிடப்பட உள்ளது.
 
இந்த திட்டத்துக்கான இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க விரும்பும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
2.5 லட் சத்துக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரர்களை வைத்துள்ள நிறுவனம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நிறுவனங்களுடன் கூட்டணி இல்லாமல் தனித்தே செயல்படும் தகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.
 
புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் மேற்பார்வையிடும். இந்த திட்டத்துக்கு முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கான முழு காப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசே அளிக்கும்.
 
இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக வேண்டுமானால் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரமாக இருக்க வேண்டும். இதற்கான வருமான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளின் குடும்பத்துக்கு தனியாக அடையாள அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது சம்பந்தப் பட்ட காப்பீட்டு நிறுவனத் தின் மூலமாகவோ வழங்கப்படும்.
 
காப்பீட்டு திட்டத்துக்கான அனுமதியை பெறும் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய முறையில் பயனாளிகளுக்கு சேவையை அளித்திட வேண்டும். ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.காப்பீட்டு திட்டத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
 
ஆகஸ்டு 22-ந்தேதி ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த போதுமான தகுதி உள்ளதா? என்று சோதிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் அளித்துள்ள விலை விவரங்கள் பின்னர் திறக்கப்படும்.
 
செப்டம்பர் 15-ந்தேதி இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கையால் காப்பீட்டு அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...