Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 21, 2011

மருத்துவ படிப்புக்கு, அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
எனவே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது.   இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திர மவுலி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மருத்துவ கவுன்சில் கவர்னர் புருசோத்தம் லால், சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
  இந்த முடிவை இணைய தளத்தில் வெளியிடுவது என்றும், பொது மக்களின் கருத்துக்களை கேட்பது என்றும் முடிவு ஆகி இருக்கிறது. இந்த தகவலை, கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திர மவுலி, புருஷோத்தம் லால், வினீத் ஜோஷி உறுதி செய்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...