Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 17, 2011

4 ஆண்டுகளுக்கு பிறகு கோதுமை ஏற்றுமதிக்கு தடையை நீக்கியது அரசு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை 4 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நீக்கியுள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் கூறியதாவது:

உள்நாட்டு சப்ளையை உறுதிப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு 2007ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்மூலம், உள்நாட்டு தேவைக்கும் அதிகமாக கோதுமை இருப்பு உள்ளது. அத்துடன், கடந்த ஆண்டில் பருவ மழை சிறப்பாக இருந்ததால் கோதுமை சாகுபடி அமோகமாக உள்ளது.
எனவே, 4 ஆண்டுகளுக்கு பிறகு கோதுமை ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் கோதுமை விலை குறைவாக இருப்பதால், ஏற்றுமதிக்கான அளவை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
சமீபத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்தது. அதில் கோதுமை ஏற்றுமதி மீதான தடை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற அமைச்சர் சரத் பவார், உற்பத்தி காரண மாக இருப்பு வைக்க இடமின்றி கோதுமை அதிக சாகுபடியாகி உள்ளதால், ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை அமைச்சர்கள் குழு ஏற்று, ஏற்றுமதி மீதான தடையை நீக்க ஒப்புதல் அளித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...