Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 07, 2011

60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா

உலகளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 60 கோடி பெண்களுக்கு தொழில் சட்டங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் கிடைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலோர் பணிபுரியும் இடங்களில் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள் என நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

பாலின சமத்துவத்திற்கும், பெண்களை சக்திப்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்ட ‘ஐ.நா பெண் (UN Women)’ என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தற்பொழுதும் அதிகமாக காணப்படுவதாகவும் பல பெண்களும் தங்களின் அடிப்படை உரிமைகளைக் குறித்து விழிப்புணர்வு பெற்று வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 28 நாடுகளின் பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதத்தை எட்டவோ அதனை தாண்டவோ முடிந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...