Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 05, 2013

மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிர்வாக கிளை, தலைமைப் பொறியாளரிடமிருந்து தொழில்நுட்ப காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. இதன்படி
எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் 822, 
எலக்ட்ரானிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜீனியரிங் 45, 
மெக்கானிக்கல் என்ஜீனியரிங் 48, 
இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜீனியரிங் 18, 
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜீனியரிங் மற்றும் தகவல் தொழில் நுட்பம் 18 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தெரிவிக்கப்பட்டுள்ள பதிவு மூப்புக்குட்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ரேஷன் கார்டு, அசல் சான்றிதழ்களுடன் தகுதியான மனுதாரர்கள் வரும் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்
வந்து தங்கள் பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...