Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 07, 2013

டிகிரி படித்தவர்களுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி : 750 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் 750 உதவி மத்திய புலனாய்வு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்தக் காலியிடங்களுக்கு பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Central Intellligence Officer GradeII/Executive: மொத்த இடங்கள்: 750 (பொது-380, ஓபிசி-202, எஸ்சி-112, எஸ்டி-56). வயது: 12.8.2013ன்படி 18 லிருந்து 27க்குள். வயது வரம்பில் எஸ்சி.எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங் கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி. கம்ப்யூட்டர் பற்றிய அறிவை பெற்றிருப்பது விரும்பத் தக்கது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- எஸ்சி.எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி செலான் அல்லது நெட் பேங்கிங் செலுத்தலாம். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, நன்னடத்தை ஆய்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு
சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத் உள்ளிட்ட 33 மையங்களில் நடைபெறும்.www.mha.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.8.2013.

-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...