Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 26, 2012

இடிக்கப்பட்ட பள்ளிவாசலை வேறிடத்தில் தங்கத்தால் கட்டித்தந்தாலும் ஏற்க்க மாட்டோம்

இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க முடியாது.

மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை அழிக்க முடியாது. பள்ளிவாசலை தங்கத்தினாலோ பொண் பொருட்களினாலோ செய்ய முடியாது. சமப்படுத்தவும் முடியாது. பெரும்பான்மையினருடன் சண்டையிட எங்களால் முடியாது. நாங்கள் பலவீனமானவர்கள். ஆனால் எமது உணர்வுகளை அவர்கள் மதிக்கவேண்டும். 60 வருட வரலாற்று கொண்ட தம்புள்ள பள்ளியில் பல இலட்சம் பேர் சுஜுத்து செய்துள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் அங்கீகரிக்கப்படுமெனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார். source:muthupettaiexpress

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...