Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 24, 2012

சிரியாவில் போர் நிறுத்தம் குறித்து ஆய்வு செய்ய 300 பேர் கொண்ட குழுவை அனுப்ப முடிவு

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சி, வன்முறையில் 9 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட னர். இதனை தடுக்க அய்.நா. சபை எடுத்த கடும் முயற்சிக்கு பிறகு அங்கு கடந்த 12ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. என்றாலும் முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. எனவே போர்நிறுத் தத்தை கண்காணிக்க அனைத்து நாட்டு பிர திநிதிகளை கொண்ட ஆய்வு குழுவை அனுப்ப அய்.நா. பாதுகாப்பு சபை முடிவு செய்து உள்ளது. இக்குழுவில் 300 பேர் இடம் பெற தீர் மானிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது சாத்தியப்படுமா? என பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. ஆய்வு குழுவினர் ஆயுதம் இன்றி நிரா யுதபாணியாக செல் கிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உறுதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...