Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 01, 2012

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் பலி

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. முத்துக் குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் வசித்து வருகிறார். முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம் படித்தவரான இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அன்னவாசலில் உள்ள தனது கட்சித் தொண்டர் பழனிச்சாமி வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை காரில் கிளம்பினார். சொக்கநாதன்பட்டி என்ற இடத்திற்கு அருகே ஆரியூர் என்ற இடத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது தென்பட்ட பள்ளத்தில் விழாமல் இருக்க திருப்பியபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரமாக வேகமாக தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே எம்.எல்.ஏ. உயிரிழந்தார். டிரைவரும், காரில் பயணித்த இன்னொருவரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீஸார் காருக்குள் பிணமாக கிடந்த எம்.எல்.ஏவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துக் குமரனின் மறைவைத்
தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...