Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 18, 2011

யுகேயில் அதிக பணிவாய்ப்பு பெறும் இந்தியர்கள்

பிரிட்டனில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் அந்நாட்டு இளைஞர்களை விட, இந்தியர்கள் ஏராளமானோர் அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

ஓஎன்எஸ் எனப்படும் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், அந்நாட்டு இளைஞர்களை விட, இந்திய மற்றும் பிற நாட்டு இளைஞர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடுகிறது என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிறந்தவர்கள் சுமார் 3,98,000 பேர் இந்த மூன்று மாதத்தில் பிரிட்டனில் உயர் பதவிகளில் பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர். கடந்த அண்டின் இதே காலாண்டில் வெறும் 1 லட்சம் இந்தியர்கள் மட்டுமே பணி வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரிட்டனில் பிறந்த இளைஞர்களை விட, பிரிட்டனில் பிறக்காத பிற நாட்டு இளைஞர்கள்தான் பிரிட்டனில் அதிக பணி வாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என்றும் அந்த புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.

கல்வியிலும் திறமையிலும், இந்திய, சீன மக்கள் தற்போது வெகுவாக முன்னேறி வருகின்றனர். பல வளர்ந்த நாடுகள் இதனைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளதை இந்த புள்ளி விவரம் எச்சரிக்கிறது என்று பிரிட்டன் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...