Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 08, 2011

சிரியாவில் இருந்து சவுதி அரேபியா தூதர் வாபஸ்

சிரியாவில் அதிபர் பஷார் அல்- ஆசாத்துக்கு எதிரான போராட்டம் தீவுரம் அடைந்துள்ளது. எனவே, ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
டெர் எஸ்சார், அல்ஜுரா ஹுலா ஆகிய நகரங்களில் பேரணியாக திரண்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் மீது ராணுவம் டாங்கிகள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 100 பேர் பலியானார்கள். இதுவரை நடந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அதிபரின் ராணுவ நடவடிக்கையை கண்டித்தும், மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சவுதி அரேபியா சிரியாவில் இருந்து தனது தூதரை வாபஸ் பெற்றுள்ளது. இந்த தகவலை மன்னர் அப்துல்லா அல்-அரேபியா டெலிவிஷனில் அறிவித்தார். சிரியாவின் நடவடிக்கை ஏற்க முடியாது.

மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...