Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 27, 2011

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இல்லை என்கிறது! விஞ்ஞானம்?


லண்டன், ஆக. 26 குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாக தெரிய வந்துள்ளது.

பாலூட்டி ஆன அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை “டயனோசரஸ்” வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவற்றின் புதை படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

ஜுராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்பு கொண்டது. இது மற்ற பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. உடல் முழுவதும் முடிகளை கொண்டதாக இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது. மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்த்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...