Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 11, 2011

ஐ.ஓ.சி., நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டு உதவித்தொகை-11-08-2011

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏராளமான கல்விமற்றும் விளையாட்டு உதவித் தொகைகளை அறிவித்துள்ளது.இன்ஜி., மருத்துவம், மேலாண்மைத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை இரு பிரிவுகளிலும் மொத்தம் 600 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேல்நிலைப் பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் 2,000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படஉள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் வழங்கப்படும் படிப்பானது எம்.சி.ஐ., - ஏ.ஐ.சி.டி.இ.,-மாநிலக் கல்வி வாரியம், மாநில அரசு, ஐ.சி.எஸ்.சி.,- சி.பி.எஸ்.இ.,- மத்திய அரசு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய ஏதேனும் ஒரு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை மண்டலம் அல்லது மாநில வாரியாக பகிர்ந்தளிக்கப்படலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்., 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மாநில அரசு மற்றும் நாட்டின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இப்பிரிவில் விண்ணபிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள்.

மேலும் விவரங்களுக்கு www.iocl.com/aboutus/scholarships.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...