Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 27, 2011

அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில்!

வாஷிங்டன், ஆக. 26 அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர்.

அந்த புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதியில் பலத்த காற்றுடன், மழை கொட்டும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் நகரில் சுமார் 56 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயரும்படி டுவிட்டர் இணையதளம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் அருகே விர்ஜீனியா, மேரிலேண்ட் நகரங்கள் உள்ளன. இங்கும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, அங்கும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டனில், கடந்த செவ்வாய்க்கிழமை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 126 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...