Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 03, 2011

மனிதன் செய்ய முடியாததை ரோபோ செய்யும் புது கண்டுப்பிடிப்பு !!

வாஷிங்டன், ஆக.2 தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற “ரோபோ”க்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...