Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 10, 2011

"மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது வரம்பு நீட்டிப்பில்லை'

புதுடில்லி : "மத்திய அரசு ஊழியர்கள், பணி ஓய்வு பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை அதிகரிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோநாராயண் மீனா, ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு, 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை, அதிகரிக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, 32.24 லட்சமாக உள்ளது. இது, கடந்த 2010 மார்ச் மாத நிலவரம். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், 2010-11ம் நிதி ஆண்டில், அரசுக்கு 94 ஆயிரத்து 270 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறு நமோநாராயண் மீனா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...