Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 04, 2010

சென்னை மால்கள்!!


கடந்த நூற்றாண்டில் சிறிய அளவு உருவாக்கப்பட்ட சென்னை நகரின் மத்தியில் அமையப்பட்ட ஸ்பென்சர் பிளாசா விருட்சமாக வளர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக கொடி கட்டி பறந்தது.

அதனைத்தொடர்ந்து பிரின்ஸி பிளாஸா,அல்சாமால் ,சிசன் காம்ப்ளக்ஸ் போன்றவை எக்மோரில் அடுத்தடுத்து உதயமாகியது.1990 களில் இளசுகளின் சரணாலயமாக அல்சா மால் விளங்கியது என்றால் மிகை அல்ல.நாகரீகமே அங்கிருந்துதான்ஆரம்பம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.அல்சா மால் செல்லாத காலேஜ் கெய்ஸ் இல்லவே இல்லை எனும் அளவுக்கு இளம் பருவத்தினர் ஒரு காலம் இம்மாலில் ஆட்சி புரிந்தனர்.அதே பகுதியில் பவுண்டன் பிளாசா தோன்றியது.அன்றைய நாகரீக யுகத்தின் ஆடை,அணிகலண்கள்,அழகை மெருகேற்றும் அலங்காரச்சாமான்கள்,வாசனைத்திரவியங்கள் என்று கொட்டி கிடப்பதை கண்டு இளசுகள் மட்டுமல்லாமல்,பெரியவர்களும் படை எடுத்து சென்றனர்.


இதே போல் நுங்கம்பாக்கத்தில் இஸ்பஹானி செண்டர்,சேத்துப்பட்டில் ஷாப்பர் ஸ்டாப்,புரசைவாக்கம் அபிராமி மால்,வட சென்னையில் பத்னி பிளாசா,தி.நகர் -- பாண்டிபஜாரில் சிறிதும் பெரிதுமாக மாயா பிளாசா,பாத்திமா பிளாசா,செல்லாமால் ,காசி ஆர்கேட்,ஜி என் செட்டி ரோடில் அங்கூர் பிளாஷா போன்றவை ஆங்காங்கே உதயமாகியது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மைலாப்பூரில் உதயமான சிட்டி செண்டர் சென்னைக்கு ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.இளையவர்கள் மட்டு மின்றி பெரியவர்கள்,முதியவர்கள் கூட வீல் சேரில் வந்து ஆவலுடன் சுற்றி ,ஷாப்பிங் செய்து அந்த ஷாப்பிங் மாலையே கலகலப்பாகி விட்டனர்.ஹைடெக் திரை அரங்குகள்,சர்வதேச தரத்தில் உணவகங்கள்,சூப்பர்மார்க்கெட்டுகள்,பிராண்டட் ஷாப்கள் என களைகட்டியது.

அதனைத்தொடர்ந்து அமிஞ்சிகரையில் அம்பா ஸ்கை வாக் உதயமாகி அந்த சாலையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.


சமீபமாக ராயப்பேட்டையில் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிருமண்டமான அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உதயமாகி சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.


புதிய மால்கள் உதிக்க ,உதிக்க பழைய மால்கள் களை இழந்து வருவது வருந்ததக்க உண்மை.நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு மாலில் மற்றுமொரு புதிய மால் உருவான காரணத்தினால் வெறும் 20000 - 30000 நபர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுத்தி விட்டது.

வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க என்னென்ன திட்டங்கள்,சலுகைகள்,குலுக்கல்கள்,பரிசுகள் வழங்க முடியுமோ அத்தனையும் வழங்கி பிரயத்தனப்பட்டு வருகின்றதுதான் இன்றைய மால்களின் நிலை

பல வணிகவளாகங்களில் சூப்பர்மார்க்கெட்டுகள் களை இழந்து போய்க்கொண்டுள்ளது.வெளி நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்,இங்குள்ளதை விட அதிகளவு எண்ணிக்கையில் மால்கள் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தாலும் அங்கு எப்பொழுதும் ஈ மொய்ப்பதைப் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை காணலாம்.ஆனால் மக்கள் தொகை பன்மடங்கு அதிகளவு உள்ள சென்னையில் ஏன் இப்படி என்று மனம் ஒப்பிட்டு,அலசிப்பார்க்கும் பொழுது புரிகின்றது ஒரு நிஜம்.
100 கிராம் சர்க்கரையும்,25 கிராம் தேயிலையும் அன்றாடம் வாங்கி டீ போட்டு காலையில் குடிப்பவர்கள் அதிகம்.பாக்கெட் ஷாம்பூ வாங்கி குளித்து விட்டு காலை உணவுக்கு 1/4 கிலோ ரவையையும் மதிய உணவுக்கு 1/2 கிலோ அரிசியும் 100 கிராம் பருப்பும்,50 மில்லி சமையல் எண்ணெயும் வாங்கி செல்பவர்கள் அதிகம்.கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இங்கே இவர்கள் 100 கிராம் சர்க்கரையும் ,50 கிராம் தேயிலையும் சூப்பர் மார்க்கெட் சென்றா வாங்க முடியும்?அண்ணாச்சி கடைகளை நாடித்தான் செல்லுவார்கள்.

அதே சமயம் இதே அண்ணாச்சி கடைகளுக்கும்,சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விலையில் நிறைய வித்தியாசம் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட பெரிய மால்களில் சென்று ஷாப்பிங் செய்யப்பயப்படுகின்றனர் என்பது என்னவோ உண்மை.

இந்த ரீதியில் சென்றால் ,பிருமாண்டமாக பெரிய பெரிய மெகா மால்கள் உருவெடுத்துக்கொண்டிருந்தால் பழைய மால்கள் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.
வரவிருக்கும் பெரிய மால்கள் பற்றி அறிய இங்கே பாருங்கள்
நன்றி:எல்லா புகழும் இறைவனுக்கே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...