Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 21, 2010

ஒரு கோரிக்கை!!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்னைக்கு புறப்படும் இரவு 10 மணி பேருந்தை கூட்ட நெரிசலில் தவறவிட்டு, பிறகு சிதம்பரம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டபோது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வேறொரு ஊரில் இருந்து 2 மணி நேரம் கியூவில் நின்றுதான் சென்னைக்கு புறப்பட முடியும் என்றால் பிறகு எதற்கு நம்மூருக்கு சென்னை பேருந்து. ஒரு சிறப்புநிலை பேரூராட்சிக்கு கிராமத்திலிருந்து வரும் ஒரு பேருந்து நம்மூரை Connection என்றால் என்ன அர்த்தம்? பேசாமல் முட்டத்தை சிறப்புநிலை பேரூராட்சியாக்கி காட்டுமன்னார்கோயிலை அதனுடன் இணைந்த ஒரு கிராமமாக ஆக்கிவிடலாம்.

A.R Travels என்ற ஆம்னி வண்டி நம்மூரிலிருந்து சென்னைக்கு இருந்தது. யார்? கண்பட்டதோ வந்த கொஞ்ச நாட்களிலிலேயே அதுவும் நின்றுவிட்டது. இன்னும் விழுப்புரம் கோட்ட வண்டியை, 3+2 நம்பி இருக்கிறோம். வாழ்க்கையின் வலிகளை மறந்து, பயணத்தில் கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைக்கும் நம்மூர் மக்களுக்கு ஒரு Ultra Deluxe வண்டி என்பது நிறைவேறாத ஒரு ஆசையாய் இருந்துவிடுமோ என அச்சமுறுகிறேன்.

18 வார்டு மக்களின் கோரிக்கை இது நிறைவேற்றி தாருங்கள் என்று ஒரு விஐபிக்கு(MLA அல்ல) நான் அனுப்பிய கோரிக்கை அதில் எது நிறைவேறியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

1.சென்னைக்கு ஒரு Ultra deluxe பேருந்து
2.இருபத்திநான்கு மணி நேரமும் இயங்கும் மருத்துவமணை மற்றும் மருந்தகம்
3.பேருந்துநிலையத்தில் சுலாப் கூட்டணியோடு ஒரு கழிப்பிடம்
4.Library ல் புதிய Programming Language புத்தகங்கள்.
5.இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும் பயணிகளுக்கு இரவுநேர உணவகம்
6.குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு மாதம் 1000 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்கும் ஒரு உழவர்சந்தை அல்லது E-Commerce portal
7.ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு சுயஉதவி குழு
8.படித்த இளைஞர்களுக்கு வங்கிகள் கடனுதவி செய்தால் அவர்கள் ஒரு entrepreneur ஆவார்கள். அது Car ஆக இருந்தாலும், கம்பியூட்டராக இருந்தாலும்.
9.ஒரே ஒரு தியேட்டர்(ரெட்டியார் மனசு வைத்தால்)
10.பாதாள சாக்கடை திட்டம்(இது இப்பொழுது சேர்த்தது)

நேரடியாகவே கேட்கிறேன் மாண்புமிகு.துரை.ரவிக்குமார் அவர்களே இவற்றை நிறைவேற்றி தாருங்கள். நாங்கள் நன்றி மறவோம். உங்களின் அடுத்த ஐந்தாண்டில் காட்டுமன்னார்கோயிலை கடலூர் மாவட்டத்தின் முதன்மை நகரமாக்குவதற்கு நாங்கள் உறுதுனையாய் இருப்போம்.
தொடர்பு செய்தி:
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமாரை முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் நியமித்துள்ளார்.

செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள துரை.ரவிக்குமார் திங்கள்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உடனிருந்தார்.
thanks:காட்டுமன்னார்கோயில் பிளாக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...