Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 15, 2010

அல்கைதாவை தோற்கடிக்க முடியாது : பிரிட்டனின் புதிய இராணுவ தலைமை அதிகாரி

மேற்குலகத்தினால் அல்கைதா குழுவினரையும், இஸ்லாமிய இராணுவத்தையும் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என இங்கிலாந்தின் புதிய இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் சேர் டேவிட் ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.
நாளை பிரிட்டனின், செனொடாஃபில் உள்ள இராணுவ வீரர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தவுள்ள டேவிட் ரிச்சார்ட், சற்று முன்பதாக த சண்டே டெலிகிராப் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் நாசி இராணுவத்தினருக்கு எதிராக இரண்டாம் உலகமகா யுத்தத்தில் சண்டையிட்டது போல், தற்போது மேற்குலகம் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுக்களுடன் சண்டையிடுகிறது. எனினும் இது ஒரு ஆபத்தான கொள்கைத்திட்டமாக கருதப்படக்கூடியது.

இஸ்லாமிய இராணுவ கட்டமைப்பை ஒடுக்குவது அசாதாரமாணது. அதனை ஒரு போதும் அடைய முடியாது. எனினும் இங்கிலாந்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அவசியமானது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ள இங்கிலாந்து படையினரில் இணைக்கப்பட்டுள்ளதை நான் விரும்பவில்லை. அவருடைய சகோதரர், ஹரி ஹெலிகொப்டர் பைலொட்டாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் பணிபுரிவதும் அப்படித்தான்.

இங்கிலாந்து இராணுவம் தான் என்ன செய்கிறது என்பதை முழுமையாக விளங்கிக்கொள்ளவில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நேட்டோ நிறைவேற்றும் என எதிர்பார்த்தே ஆப்கான் மக்கள் களைப்படைந்து விட்டனர்.

என அவர் தெரிவித்துள்ளார்.
SOURCE:Lankasri

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...