Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 23, 2010

சவுதி அரேபியர் தலை வாளால் துண்டிக்கப்பட்டது

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மோசென் அல் துசாரி. இவர் ரியாத் நகரில் காரில் சென்றபோது போக்குவரத்து விதியை மீறி கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் கோபம் கொண்ட அவர் தன் துப்பாக்கியால், அந்த போலீஸ்காரரை சுட்டுக்கொன்றார்.

இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. வாளால் தலையை துண்டிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அவர் ரியாத் நகர் அருகே உள்ள கர்ஜ் என்ற இடத்தில் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த ஆண்டு மட்டும் இவருடன் சேர்த்து மொத்தம் 23 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது
source:tamilulakam

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...