Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 25, 2010

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நில வரி ரத்து

சென்னை: பயிர்ச்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளின் முழுவிவரம் அறிந்து, விவசாயிகளுக்கு இந்த ஆண்டிற்கான நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி அறிவித்து‌ள்ளா‌ர்.


கன மழையைத் தொடர்ந்து மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. எப்பகுதிகளில் பாதிப்பு என முழு விவரம் அறிந்து, விவசாயிகளுக்கான நிலவரி இந்த ஆண்டில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளாண் விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஏழை, எளிய, விவசாயிகள், தொழிலாளர்கள், சாமான்ய மக்கள் பயன்பெற போகும் மற்றொரு அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். 60 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை 1998இல் 100 ரூபாய் என அறிவித்தோம். பிறகு 150 ரூபாய் என உயர்த்தினோம். பின்னர் 2000-2001 ஆம் ஆண்டில் 200 ரூபாயாக உயர்த்தினோம். அதைத்தொடர்ந்து, 2006இல் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போது விவசாயிகளுக்கான மாத ஓய்வூதியத் தொகை 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தமிழக அரசு வேளாண் பட்டதாரிகள் சங்கம், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் வேளாண் அலுவலர்கள், வேளாண் பொறியாளர் துறையில் சமநிலையில் பணிபுரியும் பொறியாளருக்கு இணையான சம்பளமாக திருத்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த முக்கியமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எப்போது எனச் சொல்லவில்லை என்று கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...