Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 29, 2010

அரசு பஸ்ஸில் பயணம் செய்பவரா நீங்கள்? கண்டிப்பாக குடை எடுத்து செல்ல மறக்காதீர்கள்

காட்டுமன்னார்கோவில்: அரசு டவுன் பஸ்களில் மழைக் காலங்களில் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது.

சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக தடம் எண் 2, புத்தூர் வழியாக தடம் எண் 4, வெள்ளூருக்கு தடம் எண் 23 ஏ ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் சீர் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் லேசான மழை பெய்தாலே பஸ்சுக்குள் ஒழுகும் அவல நிலை உள்ளது.சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இந்த பஸ்கள் எவ்வித மராமத்து பணிகளும் செய்வதில்லை. பழுது பார்க்கும் பணிகள் செய்யத் தேவையான எந்த பொருளும் சிதம்பரம் அரசு பணிமனையில் இல்லாததால் வெளியில் இருந்து வாங்கிப் போட்டு பில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பழுதடைந்த ஒரு நட்டு வாங்க வேண்டும் என்றாலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.

அரசு பஸ்களின் நிலை இப்படியிருந்தால் எப்படி அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?
Thanks:lalpet.co.cc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...