Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2010

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார். இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் அவர் ஈராக் போர் தொடர்பாக தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பதாவது:-

ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன்.

ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்.

இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது.

Source:lankasriworld

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...