Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 29, 2010

வீட்டுக்கே வருகிறது “பைபர் ஆப்டிக் கேபிள்

கோவை, திருப்பூர் நகர மக்களுக்கு, “டிவி’ இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் உள் ளிட்ட மதிப்புமிக்க சேவைகளை “பிராட்பேண்ட்’ இணைப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அளிக்க உள்ளது. “பைபர் ஆப்டிக் கேபிள்’ இணைப்பை நேரடியாக வீட்டுக்கு அளித்து, இச்சேவையை சாத்தியமாக்கியுள்ளது. அதிநவீன தொலைத்தொடர்பு சேவையில், “பைபர் ஆப்டிக் கேபிள்’ வழியாக இணைப்பில் எளிதாக பல்வேறு சேவைகளை வழங்க முடியும். இச்சேவையை, கோவை நகரில் முதலில் அறிமுகம் செய்துள்ளது பி.எஸ்.என்.எல்., இந்திய தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்.,

“3ஜி’ அலைவரிசை யான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் மொபைல் போன் சேவையை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத் தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக, ஒரே சமயத்தில் “டிவி’ இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோகான் பரன்சிங் போன்ற சேவைகளை யும் எளிதாக பெற முடியும். இச் சேவையை, “எப்.டி.டி.எச்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இச்சேவை அறிமுக விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., கண்ணன், முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். எஸ்.பி., கண்ணன் பேசியதாவது:

தொலைத்தொடர்பு துறையில் அடுத்தகட்ட நவீன தொழில் நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் “ஹேக்கிங்’ போல, தொலைபேசியில் “பிரிகிங்’ என்ற முறை உண்டு. தொலை பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது; “டேப்’ செய்வது போன்ற வையும் இதில் அடங்கும். பைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தில் அதி வேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப் படுகின்றன. இவற்றை இடை மறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட் டங்களில் திருத்தங்களை மேற் கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில் நுட்பங்களை பொதுமக்கள் நாட் டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார். பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மாத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங் களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங் கப்படும். பின், அனைத்து இடங் களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் “டிவி’; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப் பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிக் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட் பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் “டிவி’யை பொருத்த வரை இந்தியாவின் மிகத்துல்லிய மான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் “பேக்கேஜை’ தேர்வு செய்யலாம், என்றார். பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் முரளிதரன், துணை பொது மேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
thanks :lalpet.co,cc

1 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...